×

திமுக சார்பில் தண்ணீர் பந்தல்: எம்எல்ஏ திறந்து வைத்தார்

 

உத்திரமேரூர், மே 5: உத்திரமேரூர் ஒன்றிய, பேரூர் திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் 104 டிகிரிக்கு கோடை வெயில் கடுமையாக சுட்டெரித்து வருகிறது. இதனால் திமுக சார்பில் மக்கள் கூடும் இடங்களில் தண்ணீர் பந்தல்கள் திறக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றிய, பேரூர் திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி பேருந்து நிலையம் அருகே நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் ஞானசேகரன் தலைமை தாங்கினார். பேரூராட்சித் தலைவர் சசிகுமார் முன்னிலை வகித்தார்.  பேரூர் செயலாளர் பாரிவள்ளல் அனைவரையும் வரவேற்றார். காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ கலந்துகொண்டு தண்ணீர் பந்தலை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, பொது மக்களுக்கு மோர், திராட்சை, ஆரஞ்சு பழச்சாறு, தர்பூசணி, கிர்ணி, வெள்ளரிப்பிஞ்சு ஆகியவற்றை வழங்கினார்.

இதில் 500க்கும் மேற்பட்ட மக்கள் பழங்கள் மற்றும் பழச்சாறு வாங்கியதற்கு நன்றி தெரிவித்து மகிழ்ச்சியுடன் பெற்றுச் சென்றனர். நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக முன்னோடிகள், அணிகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post திமுக சார்பில் தண்ணீர் பந்தல்: எம்எல்ஏ திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Water pandal ,DMK ,MLA ,Uttara Merur ,Uttara Merur Union ,Perur ,Kanchipuram, Chengalpattu district ,Dinakaran ,
× RELATED கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றியத்தில்...